பதிவாளர் நாயகம் திணைக்களம்
யாழ்ப்பாணம் மாவட்டம்
தமிழ் மொழி மூலம் பிறப்பு இறப்பு மற்றும்
விவாகம் / மேலதிக விவாகப் பதிவாளர்
பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரர் உரிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் / மேலதிக விவாகப் பிரிவினுள் நிரந்தர வதிவிடதாரியாகவும் மற்றும் போதியளவான ஆதனத்துக்கு உரித்தான, பிரதேசவாசிகளால் நன்மதிப்பைப் பெறுபராகவும் இருத்தல் வேண்டும்.
இந்தப்பதவிக்காக 40 வயதுக்கு குறையாத 62 வயதுக்கு மேற்படாத ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பிப்பவர்கள் திருமணமானவராகவும் திருமணமாகி 5 வருடங்களுக்குக் குறையாதவராக இருத்தல் வேண்டும்.
விதவைகள் / தபுதாரர் அல்லது விவாகரத்துப் பெற்றவர்கள் விண்ணப்பித்தல் ஆகாது.
இதற்கான விண்ணப்பங்களை கிராம பட்டியல்கள் / கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கிய 'இணைப்பு 1' உரிய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) அலுவலகத்தில் மற்றும் உரிய காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் மாதம் 15 ஆம் திகதி அல்லது
அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
* யாழ்ப்பாணம் உடுவில் வலி தெற்கு பிரிவில் மேலதிக விவாகப் (பொது) பதிவாளர் பதவி (தமிழ்)
அரசாங்க அதிபர்/ மாவட்டச்
செயலாளர்/ மேலதிக பதிவாளர்
நாயகம், மாவட்டச் செயலாளர்
அலுவலகம், யாழ்ப்பாணம்.
* யாழ்ப்பாணம் உடுவில் ஏழாலை பிரிவில் பிறப்பு, இறப்பு மற்றும் வலி தெற்கு பிரிவில் விவாகப் (பொது) பதிவாளர் பதவி (தமிழ்)
அரசாங்க அதிபர்/ மாவட்டச்
செயலாளர்/ மேலதிக பதிவாளர்
நாயகம், மாவட்டச் செயலாளர்
அலுவலகம், யாழ்ப்பாணம்.
அறிவித்தல்:
பதிவாளர் நாயகம் திணைக்களம்,
இல. 234/ 43 டென்சில்
கொப்பேகடுவ மாவத்த
பத்தரமுல்ல.
தமிழ் மிரர் நாளிதழ்
25.02.2019
பக்கம் 11
மற்றும்
இலங்கை அரசாங்க வர்த்தமானி
நாள் : 22/02/2019
தமிழ் மொழி மூலம் பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் / மேலதிக விவாகப் பதிவாளர்
https://sigaram10.blogspot.com/2019/02/Post-of-Registrars-Births-Deaths-and-Marriages-tamil.html
No comments:
Post a Comment